Sunday, August 5, 2012

உடல், பொருள், ஆவி - அடப்பாவி!

நம்மை ஐந்து முறை முட்டாள்களாக்கி எம்மினத்திற்கு தீராத துயரத்தை கொடுத்து சன்னதம் ஆடிய, இன்னும் ஏமாளிகள் ஆக்க நினைக்கும் ஒரு மகா நடிகனை பற்றியே இன்றைய பதிவு. மிக நெடிய தமிழர் வரலாற்றில் கருப்பு பக்கங்களை எழுதி தன்னை தானே தமிழின தலைவன் என்றும் கூறிகொண்ட மிக கீழ்மையானவர். தமிழர்கள் இன்று படும் அனைத்து துயரங்களுக்கும் அது காவிரி பிரச்சனையானாலும், மீனவர்கள் எதிர்கொள்ளும் கச்சதிவு பிரச்சனையிலும், எம் தொப்புள்கொடி சொந்தங்கள் ஈழத்தில் ஒரே நாளில் இனப்படுகொலை செய்யப்படதிலும் மூல காரணகர்த்தாக்களில் இவரும் ஒருவர்.

உலக சரித்திரத்தில் எத்தனையோ கொடிய மன்னர்கள், அரசியல்வாதிகளை கண்டும் படித்தும் இருக்கிறோம் அவர்களை விஞ்சிய பொய், வஞ்சகம்சூழ்ச்சி துரோகமே உருவானவர். தன் ஆட்சிக்காகவும், குடும்பத்திற்காகவும் மாபாதக செயல்கள் செய்து இன்று தள்ளாத வயதில் முகத்திரை கிழிந்து தொங்கும் தன் பேய் முகத்தை மறைக்க இன்றளவும் நாடகங்கள் தடத்தும் நரி. ஆனாலும் தமிழின் துணைகொண்டு இவர் உதிர்க்கும் வார்த்தைகளில் மயங்கியே அறிவிழந்தோம் நாம். ஒருமுறை "தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவது சகஜம்தானே" என்று தன் ஊழலை வார்த்தை ஜாலங்கள் கொண்டு நியாயப்படுத்தியவர்.

தமிழருவி மணியன் ஒருமுறை இவரை பற்றி இவ்வாறு கூறினர் "தான் ஒருவன் மட்டும் ஒழுக்க கேடாக நடவாமல் இவரை சுற்றி இருப்பவர்களையும் மாற்றுவது அதையும் கடந்து ஒட்டுமொத்த சமூகத்தையே பாழ்படுத்துவது" எடுத்துகாட்டாக செல்வம் கொழிக்கும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தை பெற்றுக்கொண்டு அதில் தன் கைப்பிள்ளை ராசாவை அமரவைத்து உலகிலேயே மிகபெரிய ஊழல் என்று வர்ணிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலை செய்தவர். ஊரிலிருந்து ஒரு அழுக்கு பையுடன் இரயிலேரியவர் இன்று உலகப்பணக்காரர்கள் வரிசையில். 

இந்திராகாந்தி காலத்தில் தன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள கட்சத்தீவை தாரைவார்த்தது இன்றளவும் மீனவர் சாவதற்கு காரணம். ஒரு சரியான தருணத்தில் தமிழகத்திற்க்கு சாதகமாக தீர்ப்பு வரும் நேரத்தில் காவரி வழக்கை திரும்பபெற்று காவரி வறண்டு  போக காரணம். உச்சகட்டமாக ஊர் உடமை அத்தனையும் இழந்து உயிராவது காப்பாற்றப்படும் என்று போர்முனையில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை நாடகம் நடத்தி கொன்றது. போருக்கு பின் முள்வேலியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு காத்திரமாக எதுவும் செய்யாமல் "டெசோ" என்ற செத்துப்போன அமைப்பை கொண்டு இன்னும் இரத்தம் குடிக்க ஒரு ஓநாய் போல் கிளம்பி இருக்கிறார். இந்த நாடகம் இப்போது நிகழ்த்த காரணம் செய்த துரோகத்தை மறைக்கவும், வரபோகும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காகவுமே.

மத்திய ஆட்சியை நடத்துவதே இவர்கள்தான் பிறகு எதற்கு மாநாடு, கடிதம் எழுதுவது எல்லாமே ஏமாற்று வேலை. 1999 முதல் வாஜ்பாய் ஆட்சி, இரண்டு மன்மோகன் ஆட்சிக்காலங்கள் என்று தொடர்ச்சியாக பதினைந்து ஆண்டுகள் மத்தியில் மிக வலிமையாக ஆட்சி நடத்தி கொள்ளை அடித்துவிட்டு இன்று ஈழமக்களுக்கு உடல் பொருள் ஆவி அனைத்தையும் தருவேன் என்று கதையளக்கிறார், ஆடப்பாவி இப்போதாவது உன் வஞ்சகத்தை நிறுத்திக்கொள் உலகில் மானமுள்ள கடைசி ஈழத்தமிழன் உள்ளவரை தன் மண் மீட்கபோரடுவான்.

Monday, July 23, 2012

இதுவா கல்வி?


நேற்று ஒரு தொலைகாட்சியில் கல்விபற்றி விவாதம் காணக்கிடைத்ததுஒருபுறம் நாமக்கல்ராசிபுரம்திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள்ஆசிரியர்கள் மறுபுறம்
அந்த பள்ளிகளில் பயின்ற முன்னால் மாணவர்கள்அரசு மாற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்முதலில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்ணை பெறுவது ஒன்று மட்டுமே குறிக்கோளாக இயங்கும் மேலே குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி ஆட்களிடம் அவர்களின் கல்வி முறைமை(Methodology) பற்றி கேள்விகள் தொடுக்கப்பட்டன அவர்களின் பதில்களை கேட்க கேட்க ஒரு அறிவார்ந்த சமுகத்தில் இருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறோம் என்று உரைத்தது.
                  1. பதினொன்றாம் வகுப்பு படத்தை வெறும் மூன்று மாதமே நடத்துவார்கள் பிறகு பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள் தான். 2. அதிகாலை மூன்று மணி தொடங்கி இரவு பதினோரு வரை ஆசிரியர் கண்காணிப்பில் படிப்பு. 3. ஒரு பாடப்புத்தகத்தையே இரண்டாயிரம் மூவாயிரம் ஒரு-மதிப்பெண் கேள்விகளாக்கி படிக்கவைப்பது 4. மாணவர்களின் எண்ணத்தை ஒருமுகப்படுத்த வகுப்பில் ஒரு வட்டம் வரைந்து அதன் நடுவே ஒரு புள்ளி வைத்து ஊற்று நோக்கசெய்வது 5. பொது தேர்வுக்கு முன் நூற்று கணக்கான மாதிரி தேர்வுகளை எழுத செய்வதுஇவை அவர்கள் கூரியவைகளில் சில மட்டுமே இன்னும் அதிர்ச்சி தரக்கூடியவை நிறையவுண்டுகடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் பள்ளி கல்வி முடித்தவர்கள் அதிக மதிப்பெண் பெற இதில் என்ன தவறு இருக்கும் என்று எண்ணக்கூடும்.
                  ஆனால் இம்மாதிரி செயல் சமுக சமநிலையில் எவ்வளவு பெரிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறதுஇவ்வாறு படிப்பவனும் எங்கோ ஒரு கிராமத்தில்ஏன் அரசு பள்ளியில் நகரத்தில் ஏழ்மையில் பள்ளி செல்பவனும் ஒன்றாஇதை போன்ற முட்டாள் தனமான கவ்வி முறை வேறெங்கும் காணமுடியாதுமேனிலை பள்ளி அதாவது பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டம் என்பது கல்லூரிக்கு செல்லும் மாணவனின் அடிப்படை கல்விஅதில் இம்மாதிரி குறுக்கு புத்தியை பயன்படுத்தி வெற்றிகொள்வது அடுத்தவன் உணவை திருடி உண்பதற்கு சமம்இதில் கொடுமை என்னவெனில் இந்த பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பில் 900 அல்லது 1000 பேர் படிப்பார்கள்.
                  கல்வியின் பயன் ஒரு மாணவனை அறநெறிநல்லொழுக்கம் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்குவதாஇல்லை இப்படி பொருளாதாரத்தின் பயன்கொண்டு உருவாக்குவதாஇப்படி கல்வி கற்பவனுக்கு எவ்வாறு சிந்திக்கும் திறன் வரும்சுதந்திரத்திற்கு பின் நாம் எந்த அறிவியல் கண்டுபிடிப்பை செய்தோம்எவனோ கண்டுபிடித்த ஜாவாவிலும்ஆரகில் போன்ற மென்பொருளில் வேலை செய்துவிட்டு நாங்கள் வளர்ந்துவிட்டோம்வல்லரசு என்று நமக்கு நாமே செல்லிக்கொண்டு திரிகிறோம்.
                  சாராயம் விற்றவன் கல்வியையும் கல்விதரவேண்டிய அரசு சாராயத்தை விற்பதை எவன் கேள்விகேட்டான்இந்த கேள்விக்கெல்லாம் மூலம் எதன் அடிப்படையில் நம்மை ஆள்பவனை தெரிவு செய்கிறோம் என்பதிலிருந்தேகையேந்தி பணம்பெற்று மதிய உணவிட்டு கல்விகொடுத்த காமராசர் எங்கே இவர்கள் எங்கேஒரு கவிஞன் அழகாக சொன்னான்  நாங்கள் மாணவர்களை மருத்துவர்களாக பொறியாளர்களாக்கினோம் ஏனோ மனிதர்களாக்க மறந்துவிட்டோம்என்று இதுதான் இன்றைய கல்வியின் நிலை.

Friday, April 27, 2012

நானும் தமிழனே!

தமிழர்கள் தன்னகத்தே செழுமையான மொழியையும், உயரிய நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களாக விளங்கி வந்திருக்கிறோம். அந்த வகையில் நம்முடைய இலக்கியங்கள், நாம் கற்றுகொண்ட அறநெறிகள் யாவும் நம் வாழ்கையை செழுமைபடுத்தவே செய்திருக்கின்றன. நாம் எந்த ஒரு இனக்குழுவை விடவும் மிக வீரியம் மிக்கவர்களாக, செயல் நேர்த்தி உடையவர்களாக இருந்துவருகிறோம்.

இன்று காலை நோர்வேயின் ஒஸ்லோ மாநகரத்தில் மூன்றாவது தமிழ் திரைப்படவிழாவில் பங்கெடுப்பதற்காக நிலக்கீழ் ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன். அதனுள் அனைத்து பெட்டிகளிலும் என்னை கவர்ந்த ஒரு விளம்பரம் அது ஐரோப்பா, ஆப்பிரிக்க, மற்றும் பல நாடுகளில் பறந்து விரிந்திற்கும் லிபரா எனும் தொலைதொடர்பு நிறுவனுத்துடையது.இதில் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த நிறுவனம் மூன்று தமிழர்களால் நிறுவப்பட்டது. லியோன், பாஸ்கரன், மற்றும் ரதீஸ் என்பவர்களே அவர்கள். நார்வேயில் உள்ள தமிழர்களே கூட அறியாத ஒரு செய்தி இது. 2001 ஆம் ஆண்டு இம்மூவரும் தங்கள் ஒரு பயணத்தின் போது உதித்த சிறு பொறியில் ஆரம்பிக்கபட்ட நிறுவனம் இன்று பல மில்லியன் டாலர் பெருமதி உடையதாக வளர்ந்து நிற்கிறது.
இவர்களைப்பற்றி மேலும் இணையத்தில் தேடியபோது லிபராவின் தலைமை நிர்வாகி திரு. ரதீசன் யோகநாதன்(படத்தில் மூன்றாவதாக இருப்பவர்) கூறுகிறார் ஒருவன் திறமையை கற்று கொள்ளலாம் அறிவை வளர்த்து கொள்ளலாம் ஆனால் உளப்பாங்கு(attitude) அதை யாராலும் கொடுக்கமுடியாது  மாறாக அவனுக்குள்ளாகவே இருக்கவேண்டும். இவர் தன்னுடைய 15 ஆவது வயதில் இங்கிலாந்திற்கு அகதியாக வந்து படித்து விமான பொறியியலில் பட்டம் பெற்றவர்.
இவர்கள் மூவரும் தன்னுடைய வருமானத்தின் பெரும் பகுதியை ஒரு அறகட்டளை அமைத்து சென்னைக்கு அருகில் ஆயிரம் ஈழ தமிழ் குழந்தைகளுக்கு கல்வியும் அவர்கள் குடும்பத்திற்கும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். நான் அறிந்த வரையிலும் பிற தமிழர்கள் ஐரோப்பாவில் இருந்து மேல்மருவத்தூரிலும் இன்ன பிற சாமியர்களிடமும் ஈரோக்களில் பணத்தை கொட்டும் போது இவர்கள் தான் பட்ட துன்பம் தன் இனம் பட கூடாது என்று செயல்படுவது போற்றுதலுக்குரியது.