நேற்று
ஒரு தொலைகாட்சியில் கல்விபற்றி
விவாதம் காணக்கிடைத்தது, ஒருபுறம் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளை
சேர்ந்த பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்
மறுபுறம்
அந்த
பள்ளிகளில் பயின்ற முன்னால்
மாணவர்கள், அரசு
மாற்றும் மாநகராட்சி பள்ளி
ஆசிரியர்கள். முதலில்
அரசு பொது தேர்வில் அதிக
மதிப்பெண்ணை பெறுவது ஒன்று
மட்டுமே குறிக்கோளாக இயங்கும்
மேலே குறிப்பிட்ட பகுதிகளை
சேர்ந்த பள்ளி ஆட்களிடம்
அவர்களின் கல்வி முறைமை(Methodology) பற்றி
கேள்விகள் தொடுக்கப்பட்டன
அவர்களின் பதில்களை கேட்க
கேட்க ஒரு அறிவார்ந்த சமுகத்தில்
இருந்து நாம் எவ்வளவு தூரம்
விலகி வந்திருக்கிறோம் என்று
உரைத்தது.
1. பதினொன்றாம்
வகுப்பு படத்தை வெறும் மூன்று
மாதமே நடத்துவார்கள் பிறகு
பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள்
தான்.
2. அதிகாலை
மூன்று மணி தொடங்கி இரவு
பதினோரு வரை ஆசிரியர்
கண்காணிப்பில் படிப்பு.
3. ஒரு
பாடப்புத்தகத்தையே இரண்டாயிரம்
மூவாயிரம் ஒரு-மதிப்பெண்
கேள்விகளாக்கி படிக்கவைப்பது 4. மாணவர்களின்
எண்ணத்தை ஒருமுகப்படுத்த
வகுப்பில் ஒரு வட்டம் வரைந்து
அதன் நடுவே ஒரு புள்ளி வைத்து
ஊற்று நோக்கசெய்வது 5. பொது
தேர்வுக்கு முன் நூற்று
கணக்கான மாதிரி தேர்வுகளை
எழுத செய்வது. இவை
அவர்கள் கூரியவைகளில் சில
மட்டுமே இன்னும் அதிர்ச்சி
தரக்கூடியவை நிறையவுண்டு. கடந்த
பத்தாண்டுகளில் தமிழகத்தில்
பள்ளி கல்வி முடித்தவர்கள்
அதிக மதிப்பெண் பெற இதில்
என்ன தவறு இருக்கும் என்று
எண்ணக்கூடும்.
ஆனால்
இம்மாதிரி செயல் சமுக சமநிலையில்
எவ்வளவு பெரிய சீர்கேட்டை
ஏற்படுத்துகிறது? இவ்வாறு
படிப்பவனும் எங்கோ ஒரு
கிராமத்தில், ஏன்
அரசு பள்ளியில் நகரத்தில்
ஏழ்மையில் பள்ளி செல்பவனும்
ஒன்றா? இதை
போன்ற முட்டாள் தனமான கவ்வி
முறை வேறெங்கும் காணமுடியாது. மேனிலை
பள்ளி அதாவது பதினொன்று
பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டம்
என்பது கல்லூரிக்கு செல்லும்
மாணவனின் அடிப்படை கல்வி, அதில்
இம்மாதிரி குறுக்கு புத்தியை
பயன்படுத்தி வெற்றிகொள்வது
அடுத்தவன் உணவை திருடி உண்பதற்கு
சமம். இதில்
கொடுமை என்னவெனில்
இந்த பள்ளிகளில் பனிரெண்டாம்
வகுப்பில் 900 அல்லது 1000 பேர்
படிப்பார்கள்.
கல்வியின்
பயன் ஒரு மாணவனை அறநெறி, நல்லொழுக்கம்
போன்றவற்றின் அடிப்படையில்
உருவாக்குவதா? இல்லை
இப்படி பொருளாதாரத்தின்
பயன்கொண்டு உருவாக்குவதா? இப்படி
கல்வி கற்பவனுக்கு எவ்வாறு
சிந்திக்கும் திறன்
வரும். சுதந்திரத்திற்கு
பின் நாம் எந்த அறிவியல்
கண்டுபிடிப்பை செய்தோம்? எவனோ
கண்டுபிடித்த ஜாவாவிலும், ஆரகில்
போன்ற மென்பொருளில் வேலை
செய்துவிட்டு நாங்கள்
வளர்ந்துவிட்டோம், வல்லரசு
என்று நமக்கு நாமே செல்லிக்கொண்டு
திரிகிறோம்.
சாராயம்
விற்றவன் கல்வியையும்
கல்விதரவேண்டிய அரசு சாராயத்தை
விற்பதை எவன் கேள்விகேட்டான்? இந்த
கேள்விக்கெல்லாம் மூலம் எதன்
அடிப்படையில் நம்மை ஆள்பவனை
தெரிவு செய்கிறோம்
என்பதிலிருந்தே. கையேந்தி
பணம்பெற்று மதிய உணவிட்டு
கல்விகொடுத்த காமராசர் எங்கே
இவர்கள் எங்கே? ஒரு
கவிஞன் அழகாக சொன்னான் நாங்கள்
மாணவர்களை மருத்துவர்களாக
பொறியாளர்களாக்கினோம் ஏனோ
மனிதர்களாக்க மறந்துவிட்டோம்" என்று
இதுதான் இன்றைய கல்வியின்
நிலை.

No comments:
Post a Comment